செய்திகள்

வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2018-10-09 16:38 GMT   |   Update On 2018-10-09 16:38 GMT
வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:

நெல்லை தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேசன் (வயது 30). இவர் வேலை தேடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்தார். ஓசூரில் பழைய பெங்களூரு சாலை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி வேலை தேடி வந்தார். ஆனால் மகேசனுக்கு வேலை கிடைக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த அவர் தங்கும் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News