செய்திகள்

மயக்க மருந்து கேக் கொடுத்து பலாத்காரம்- சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்

Published On 2018-10-09 11:01 GMT   |   Update On 2018-10-09 11:01 GMT
மயக்க மருந்து கேக் கொடுத்து சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை மாவட்டம், கடச்சனேந்தல் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார்.

அதனை திருப்பிக் கொடுப்பதற்காக சேகர் கடந்த 5 மாதத்துக்கு முன்பு சென்றார். அப்போது வீட்டில் 14 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.

சபலம் அடைந்த சேகர் கேக்கில் மயக்க மருந்து கலந்து சிறுமிக்கு கொடுத்தார். சிறுமி மயங்கியதும் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டார்.

இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் தந்தை அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப் பதிவு செய்து சேகரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News