செய்திகள்
சங்கரன்கோவில் அருகே போலீஸ்காரருடன் தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது
சங்கரன்கோவில் அருகே பெண்களுடன் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட போலீஸ்காரருடன் தகராறில் ஈடுபட்டதால் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில், அக். 7-
சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரம் அடுத்த ஆராய்ச்சிபட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 23). நேற்று அப்பகுதியில் உள்ள ராமர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக செல்லப்பாண்டி சென்றார். அப்போது அங்கு பெண்களுடன் தகராறில் ஈடுபட்டார்.
இதை அங்கு பாதுகாப்புக்கு நின்ற அய்யாபுரத்தை சேர்ந்த போலீஸ்காரர் மாரிச்சாமி தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி போலீஸ்காரருடன் தகராறில் ஈடுபட்டார்.
இது குறித்து மாரிச்சாமி அய்யாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லப்பாண்டியை கைது செய்தனர்.