செய்திகள்

சிந்தாதிரிப்பேட்டை அருகே ரூ.50 லட்சம் மோசடி - தனியார் கிளப் உரிமையாளர் கைது

Published On 2018-10-07 11:21 GMT   |   Update On 2018-10-07 11:21 GMT
சிந்தாதிரிப்பேட்டை அருகே ரூ.50 லட்சம் மோசடி செய்த தனியார் கிளப் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

அசோக்நகர் 12-வது அவென்யூவை சேர்ந்தவர் ஆனந்த். தொழில் அதிபர். இவரிடம் 2 ஆண்டுக்கு முன்பு சிந்தாதிரிப்பேட்டையில் தனியார் கிளப் நடத்தி வரும் சரவணன் ரூ.50 லட்சம் கடன் வாங்கினார்.

பணத்தை திருப்பி கேட்ட போது சரவணன் காலம் தாழ்த்தி வந்தார். பின்னர் அவர் கொடுத்த காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. ஆனால் ஆனந்த் பணத்தை மீண்டும் திருப்பி கேட்டார். ஆனந்த் பணத்தை தராமல் ஏமாற்றி வந்தார்.

இதுகுறித்து ஆனந்த் சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் கிளப் உரிமையாளர் சரவணனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News