செய்திகள்

சங்கரன்கோவிலில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2018-10-05 10:32 GMT   |   Update On 2018-10-05 10:32 GMT
சங்கரன்கோவிலில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் மர்மநபர்கள் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் காந்தி நகர் 2-ம் தெருவை சேர்ந்தவர் கணேசன் (53). சம்பவத்தன்று இவரது மகள் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் கணேசன் மற்றும் அவரது மனைவி, மகள் தூங்கி கொண்டிருந்துள்ளனர். நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் தூங்கி கொண்டிருந்த கணேசனின் மகள் கழுத்தில் இருந்த செயினை அறுத்து கொண்டு செல்ல முயன்றுள்ளான்.

சத்தம் கேட்டு எழுந்த கணேசனின் மகள் திருடனுடன் போராடிய போது பாதி செயினை மட்டும் பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டானாம்.

பின்னர் அருகில் உள்ளவர்கள் தொடர்ந்து விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. திருடனின் கையில் கிடைத்த செயின் மட்டும் 28 கிராம் என கூறப்படுகிறது.

இது குறித்து புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News