செய்திகள்

அபிராமபுரத்தில் பட்டாக்கத்திகளுடன் காரில் சுற்றிய 4 வாலிபர்கள் கைது

Published On 2018-10-03 08:24 GMT   |   Update On 2018-10-03 08:24 GMT
அபிராமபுரத்தில் பட்டாக்கத்திகளுடன் காரில் சுற்றிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

அபிராமபுரம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகன சோதனையும் நடத்தப்பட்டது. ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர்.

அதில் 4 வாலிபர்கள் இருந்தனர். அவர்களது பெயர் பாலமுருகன், ஸ்டீபன், ராகுல், சேகர் என்பது தெரியவந்தது.

பாலமுருகன் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனை தொடர்ந்து காரில் சோதனை நடத்தினர். அதில் 2 பெரிய பட்டாக்கத்திகள் இருந்தன. அவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

100 கிராம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களும் காரில் இருந்து கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து பிடிபட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது. 4 பேரும் கத்தியுடன் காரில் சுற்றியது ஏன்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கஞ்சா பொட்டலங்களை 4 பேரும் எங்கிருந்து வாங்கினார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News