திருவையாறில் ஆற்றில் மூழ்கி மாணவர் பலி
திருவையாறு:
திருவையாறு வடக்குவீதி ராஜா நகரை சேர்ந்த காசிநாதன் மகன் சஞ்சீவ் (வயது 15) 10-ம் வகுப்பு மாணவர்.
இவர் நேற்று மதியம் 3.30 மணிக்கு திருவையாறு 15 மண்டபதெரு கடைசியில் நெல்லிக்காய் படித்துறை குளிக்க சென்றார். 4 மணி அளவில் அவருடன் சென்ற சக மாணவர்கள் சஞ்சீவ் ஆற்றில் மூழ்கி விட்டார் என்று அவரது பெற்றோர்களிடம் தகவல் கொடுத்தனர்.
இதுபற்றி அவர்கள் திருவையாறு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, கலியபெருமாள் ஆகியோர் விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் சந்திரசேகரன், செல்வராஜ், முத்துகுமார், வெங்கடேசன், பிரபாகரன், சசிகுமார் ஆகியோர் காவிரி ஆற்றில் மூழ்கிய சஞ்சீவியை மீட்டு திருவையாறு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
இதுபற்றிய புகாரின் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் விசாரணை நடத்தி வருகிறார்.