செய்திகள்
கோவையில் மோசடி வழக்கில் கைதானவர் நெஞ்சுவலியால் பலி
மோசடி வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர், நெஞ்சுவலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது திடீரென உயிரிழந்தார்.
கோவை:
கரூர் மாவட்டம் வண்ணையர்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 57). இவர் மீது ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் மோசடி, கொலை மிரட்டல் புகார் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்குமார் கடந்த 23-ந் தேதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார். உடனே அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கைதிகள் வார்டில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இன்று அதிகாலை 3.30 மணி அளவில் செந்தில் குமாருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே டாக்டர்கள் விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வண்ணையர்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 57). இவர் மீது ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் மோசடி, கொலை மிரட்டல் புகார் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்குமார் கடந்த 23-ந் தேதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார். உடனே அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கைதிகள் வார்டில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இன்று அதிகாலை 3.30 மணி அளவில் செந்தில் குமாருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே டாக்டர்கள் விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.