செய்திகள்
விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி பெண் பலி
விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியானார்.
வளவனூர்:
விழுப்புரம் அருகே உள்ள சித்தேரிக்கரையை சேர்ந்தவர் அஷ்ரப் அலி மகன் உமர்பரூக் (வயது 26). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது 8 மாத பெண் குழந்தை காஷ்யாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் மனைவி சுகையா (22) மற்றும் குழந்தையுடன் சென்றார்.
வளவனூர் மெயின்ரோட்டில் முன்னால் சென்ற பஸ்சை உமர்பரூக் முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த சரக்கு ஆட்டோ உமர்பரூக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தவறி கீழே விழுந்ததில் உமர்பரூக், அவரது மனைவி சுகையா ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகையா இறந்தார். உமர்பரூக் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் குழந்தை காஷ்யா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியது. இந்த விபத்து குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள சித்தேரிக்கரையை சேர்ந்தவர் அஷ்ரப் அலி மகன் உமர்பரூக் (வயது 26). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது 8 மாத பெண் குழந்தை காஷ்யாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் மனைவி சுகையா (22) மற்றும் குழந்தையுடன் சென்றார்.
வளவனூர் மெயின்ரோட்டில் முன்னால் சென்ற பஸ்சை உமர்பரூக் முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த சரக்கு ஆட்டோ உமர்பரூக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தவறி கீழே விழுந்ததில் உமர்பரூக், அவரது மனைவி சுகையா ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகையா இறந்தார். உமர்பரூக் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் குழந்தை காஷ்யா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியது. இந்த விபத்து குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.