செய்திகள்
இருகூர் அருகே வேலை செய்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்து பிளம்பர் பலி
இருகூர் அருகே வேலை செய்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்து பிளம்பர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்காநல்லூர்:
கோவை சூலூர் சின்னக்கா கிருஷ்ணதேவர் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). பிளம்பர். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இருகூர் கருணாநிதி நகரில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் குழாய் பதிக்கும் வேலை செய்தார். அப்போது மாடியில் இருந்து தவறி விழுந்தார்.
கீழே விழுந்த ராஜேந்திரன் படுகாயம் அடைந்த ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.