செய்திகள்

திருவாரூரில் ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் மாயம்

Published On 2018-09-25 16:22 GMT   |   Update On 2018-09-25 16:22 GMT
திருவாரூரில் ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் மாயமானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர்:

திருவாரூர் மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல். இவருடைய மகன் சார்லஸ் (வயது 17). இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த அவர் தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு்ள்ளதால் வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று சார்லஸ், தனது நண்பர்களுடன் சீனுவாசபுரம் அருகில் உள்ள ஓடம்போக்கியாற்றில் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது ஆற்றில் மூழ்கி சார்லஸ் மாயமானார். இதனால் அவரது நண்பர்கள் அந்த பகுதியில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் ஆற்றில் குதித்து தேடினர்.

மேலும், தகவல் அறிந்து திருவாரூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களும் தேடினர். ஆனால் சார்லஸ் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து அவரை தொடர்ந்து தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News