செய்திகள்
பெரம்பலூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலி
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், தம்பையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 57). தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு கொண்டு மெயின் ரோட்டிற்கு வந்தார். அப்போது அந்த வழியாக பெரம்பலூர் தண்ணீர் பந்தலில் இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உடும்பியத்தை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமாரை (29) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், தம்பையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 57). தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு கொண்டு மெயின் ரோட்டிற்கு வந்தார். அப்போது அந்த வழியாக பெரம்பலூர் தண்ணீர் பந்தலில் இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உடும்பியத்தை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமாரை (29) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.