செய்திகள்

இரணியலில் தச்சு தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-09-25 11:45 GMT   |   Update On 2018-09-25 11:45 GMT
இரணியல் அருகே உடல் நலக்குறைவு காரணமாக தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல்:

இரணியல் கோணம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 56). தச்சு தொழிலாளி.

மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவர், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

இந்த நிலையில் மணிகண்டனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றார். எனினும் நோய் குணமாகவில்லை. இதனால் மணிகண்டன் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் மணிகண்டன் சம்பவத்தன்று வீடு அருகே வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அவர், வி‌ஷம் குடித்து இருக்கலாம் என்று கருதிய அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மணிகண்டனின் மகன் ராஜேஷ், இரணியல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பேபி தங்கம் வழக்கு பதிவு செய்து மணிகண்டனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் அவர் தற்கொலை செய்தது ஏன்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News