செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே கள்ளக்காதலை தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்

Published On 2018-09-24 11:04 GMT   |   Update On 2018-09-24 11:04 GMT
ஆண்டிப்பட்டி அருகே கள்ளக்காதலை தட்டிக் கேட்ட பெண் தாக்கப்பட்டார்.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே ராஜதானி காமாட்சி புரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 43). இவரது மனைவி போதுமணி (39). கம்பம் அருகே உள்ள அணைப்பட்டியில் குடியிருந்தனர். ரஞ்சித்குமார் குடிப்பழக்கத்துக்கு ஆளானதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. எனவே இருவரும் காமாட்சிபுரத்துக்கே வந்துவிட்டனர்.

அதே பகுதியைச் சேர்ந்த உமா என்ற பெண்ணுடன் ரஞ்சித்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரஞ்சித்குமார் திடீரென மாயமானார். போதுமணி அவரை தேடிப்பார்த்தபோது தனியார் தோட்டத்தில் உமாவுடன் பேசிக் கொண்டு இருந்தார். இதனை போதுமணி தட்டிக் கேட்டு வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் அவர் வர மறுத்து உமா மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் போதுமணியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர். இது குறித்து ராஜதானி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்குமார் மற்றும் உமாவை கைது செய்தனர்.
Tags:    

Similar News