செய்திகள்
நாகர்கோவில் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை
நாகர்கோவில் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரல்வாய்மொழி:
நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் தாணு. இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள். ஒரு மகன் உள்ளனர்.
இளைய மகள் லெட்சுமி நாராயணி (வயது 19) நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் படித்து வந்தார். இவரது தாயார் ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். லெட்சுமி நாராயணி அருகில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்தார். அங்கிருந்து வீட்டிற்கு சாப்பிட்டு விட்டு வருவதாக கூறிவிட்டு வந்தார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் சாப்பிட்டுவிட்டு பாட்டி வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை.
இந்த நிலையில் வேலை முடிந்து பெற்றோர் வீடு திரும்பினர். வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. வீட்டின் கதவை தட்டினர். ஆனால் திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் லெட்சுமி நாராயணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் தாணு. இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள். ஒரு மகன் உள்ளனர்.
இளைய மகள் லெட்சுமி நாராயணி (வயது 19) நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் படித்து வந்தார். இவரது தாயார் ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். லெட்சுமி நாராயணி அருகில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்தார். அங்கிருந்து வீட்டிற்கு சாப்பிட்டு விட்டு வருவதாக கூறிவிட்டு வந்தார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் சாப்பிட்டுவிட்டு பாட்டி வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை.
இந்த நிலையில் வேலை முடிந்து பெற்றோர் வீடு திரும்பினர். வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. வீட்டின் கதவை தட்டினர். ஆனால் திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் லெட்சுமி நாராயணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.