செய்திகள்
கோவையில் போலி வெளிநாட்டு மது பாட்டில்கள் கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது
கோவையில் போலி வெளிநாட்டு மது பாட்டில்களை கடத்தி வந்த 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கார் - மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கோவை:
கோவை பெரிய நாயக்கன்பாளையம் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அன்னூர் - சத்தி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் புல்லட் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை மறித்து சோதனை செய்தனர். அப்போது புல்லட்டில் 20 போலி வெளிநாட்டு மது பாட்டில்கள் இருந்தது.
மது பாட்டில்கள், புல்லட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது வெளிநாட்டு போலி மது பாட்டில்களை கடத்தி வந்தவர் கருமத்தம்பட்டி அருகே உள்ளகணியூரை சேர்ந்த பிரபு (34) என்பது தெரிய வந்தது.அவரை கைது செய்தனர்.
இதே போல் அன்னூர் கைகாட்டி பிரிவில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கேரள பதிவெண் கொண்டு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் வெளிநாட்டு போலி மது பாட்டில்கள் 70 இருந்தது.
இதனை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த தாஸ் என்கிற ஆரோக்கிய தாஸ் கடத்தி வந்தது தெரிய வந்தது. தாஸ் தற்போது கோவை சரவணம்பட்டியில் வசித்து வருகிறார். அவரை கைது செய்தனர். மது பாட்டில் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். #tamilnews
கோவை பெரிய நாயக்கன்பாளையம் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அன்னூர் - சத்தி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் புல்லட் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை மறித்து சோதனை செய்தனர். அப்போது புல்லட்டில் 20 போலி வெளிநாட்டு மது பாட்டில்கள் இருந்தது.
மது பாட்டில்கள், புல்லட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது வெளிநாட்டு போலி மது பாட்டில்களை கடத்தி வந்தவர் கருமத்தம்பட்டி அருகே உள்ளகணியூரை சேர்ந்த பிரபு (34) என்பது தெரிய வந்தது.அவரை கைது செய்தனர்.
இதே போல் அன்னூர் கைகாட்டி பிரிவில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கேரள பதிவெண் கொண்டு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் வெளிநாட்டு போலி மது பாட்டில்கள் 70 இருந்தது.
இதனை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த தாஸ் என்கிற ஆரோக்கிய தாஸ் கடத்தி வந்தது தெரிய வந்தது. தாஸ் தற்போது கோவை சரவணம்பட்டியில் வசித்து வருகிறார். அவரை கைது செய்தனர். மது பாட்டில் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். #tamilnews