செய்திகள்

அருப்புக்கோட்டையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் - 4 பேர் கைது

Published On 2018-09-24 09:00 GMT   |   Update On 2018-09-24 09:00 GMT
அருப்புக்கோட்டையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். #arrest

பாலையம்பட்டி:

அருப்புக்கோட்டையில் வீடு, கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் வெற்றி முருகன், செந்தில்வேல், முருகேசுவரி, நாகேஷ் மற்றும் போலீசார் அருப்புக்கோட்டை டவுன் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள், குடோன்களில் சோதனை நடத்தினர்.

அப்போது புகையிலை பொருட்கள், குட்காவை வீடு, குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக நெசவாளர் காலனியை சேர்ந்த அழகர்சாமி, முத்துமுருகன், சுந்தரம், நவநீதன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 140 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

Tags:    

Similar News