செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

Published On 2018-09-23 16:24 GMT   |   Update On 2018-09-23 16:24 GMT
நாங்குநேரியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் மைதிலி விசாரணை நடத்தி வருகிறார்.
நாங்குநேரி:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சன்னதி தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா (25). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகின்றன. பிரியாவுக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் மனமுடைந்த பிரியா வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியாவுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் நெல்லை உதவி கலெக்டர் மைதிலி மேல் விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News