ராசிபுரத்தில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
ராசிபுரம்,:
கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் திடீரென்று மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.
இதனால் நகரின் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் கவுண்டம் பாளையம், காக்காவேரி, ஆண்டகளூர் கேட், புதுப்பாளையம், மசக்காளிப்பட்டி, வடுகம், புதுப்பட்டி, பட்டணம், வடுகம், நாமகிரிபேட்டை, சந்திரசேகரபுரம், அத்தனூர், தேங்கல் பாளையம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களிலும் மழை பெய்தது. இதனால் வயல்களில் மழை நீர் தேங்கியது. திடீரென்று மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
என்னதான் மழை பெய்தாலும் ராசிபுரம் சேலம் ரோட்டில் உள்ள ஏரி, கோனேரிப்பட்டி ஏரி, பட்டணம் ஏரி, சிங்களாந்த புரம் ஏரி உள்பட பல்வேறு ஏரிகள் மழை நீருக்கு ஏங்கிக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த வறண்ட ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.