செய்திகள்

தண்டராம்பட்டு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-09-22 17:49 GMT   |   Update On 2018-09-22 17:49 GMT
தண்டராம்பட்டு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூரை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மனைவி சிந்துநதி (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. கடந்த சில நாட்களாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்குளுள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிந்துநதி நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சாத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட சிந்துநதிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் திருவண்ணாமலை உதவி கலெக்டர் தங்கவேலு மேல் விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News