செய்திகள்

செய்யாறு அருகே மனைவியை கொடுமைப்படுத்திய பேராசிரியர் கைது

Published On 2018-09-22 13:06 GMT   |   Update On 2018-09-22 13:06 GMT
செய்யாறு அருகே மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள சாமந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் மணிகண்டன் (வயது 29). இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (28) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 வயதில் பெண் குழுந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகாலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

சம்பவத்தன்று மணிகண்டன் மகாலட்சுமியிடம் மீண்டும் நகை, பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகாலட்சுமியை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

இதுகுறித்து மகாலட்சுமி செய்யாறு அனைத்து மகளீர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டன், அவரது தந்தை சந்திரசேகர், நாராயணசாமி ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News