செய்திகள்

கபிஸ்தலம் அருகே கூலி தொழிலாளி மீது தாக்குதல்

Published On 2018-09-22 11:27 GMT   |   Update On 2018-09-22 11:27 GMT
கபிஸ்தலம் அருகே கூலி தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே கோவில்பத்து அண்ணா காலனியில் வசிப்பவர் சாமிநாதன் (வயது 68). கூலி தொழிலாளி. இவரது தம்பி மகன் மணி என்பவருக்கும் அதே தெருவில் வசிக்கும் கணேசன் மகன்கள் வீரையன் (24), வீரகாசன் (22), அவரது உறவினர் செல்வமணி (25) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று இரண்டு தரப்பினருக்கும் இடையில் வாய்தகராறு ஏற்பட்டது. இதை தடுத்த சாமிநாதனை வீரையன், வீரகாசன் மற்றும் செல்வமணி ஆகிய மூன்று பேரும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சாமிநாதனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து சாமிநாதன் கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரையன், வீரகாசன், செல்வமணி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News