செய்திகள்

பட்டாபிராமில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

Published On 2018-09-22 10:18 GMT   |   Update On 2018-09-22 10:18 GMT
பட்டாபிராம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
ஆவடி:

பட்டாபிராம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில் பட்டாபிராம் குளக்கரை தெருவில் லாட்டரி சீட்டு விற்ற பூபதி, மதுபாலன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம், லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News