செய்திகள்
மீஞ்சூரில் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident
பொன்னேரி:
சிறுவாக்கம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ரவி. தனியார் கம்பெனி ஊழியர். இவர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பினார். மீஞ்சூர் பஸ்நிலையம் அருகே வந்த போது நிலக்கரி ஏற்றி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரவி சம்பவ இடத்திலேயே பலியானார்.