செய்திகள்

மத்தூர் அருகே விபத்து: 65 வயது பெண் பலி

Published On 2018-09-21 15:07 GMT   |   Update On 2018-09-21 15:07 GMT
மத்தூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த பெண் மீது மாருதி வேன் மோதியது. இதில் சம்பவம் இடத்திலேயே அவர் பலியானார்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை அடுத்த ஒபிலிகரட்டூர் அம்மன் நகரை சேர்ந்தவர் விஜயா (வயது 65). இவரும், இவரது மகனும் நேற்று மாலை திருப்பத்தூர்-காவேரிப்பட் டிணம் சாலையில் நின்று கொண்டு இருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த மாருதி வேன் இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே விஜயா பலியானார். அவரது மகன் கமலநாதன் (45) காயமடைந்து மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து மத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News