search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில் பெண் பலி"

    • போலீசார் விசாரணை
    • சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தல்

    செங்கம்:

    ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணகி(வயது 48). இவருடைய கணவர் மாரியப்பன் மற்றும் பேரன்

    எழிலிசைமாறன்(2) ஆகியோருடன் செங்கம் அருகே உள்ள மாதிமங்கலம் பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது செங்கம் நகர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கண்ணகி கீழே விழுந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த அரசு பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கண்ணகி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்து செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கண்ணகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திடவும், இனிவரும் காலங்களில் இது போன்று விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூகஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    • பைக் பெண் மீது மோதியதில் படுகாயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • பெரியகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகில் உள்ள கீழவடகரை தெய்வேந்திரபுரத்தை சேர்ந்த மூக்கையா மனைவி சரசு (வயது66). இவர் சம்பவத்தன்று தனது மகள் வனிதாவுடன் மோட்டார் சைக்கிளில் சாமியார்மடம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் (33) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சரசு கீழே விழுந்தார். படுகாயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.

    பெரியகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்ரா சம்பவத்தன்று தனது மொட்டில் சந்திரபுரம்- சுல்தான்பேட்டை ரோட்டில் சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர் புளியமரத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சித்ரா (வயது 44). இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் சந்திரபுரம்- சுல்தான்பேட்டை ரோட்டில் சென்றார். அப்போது அவரது மொபட் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.
    • சிகிச்சை பலனளிக்காமல் சரோஜா பரிதாபமாக இறந்தார்.

    கோவை:

    கோவை அருகே உள்ள நரசிம்ம நாயக்கன் பாளையம் அங்கண்ணன் நகரை சேர்ந்தவர் லோக சண்முகம். இவரது மனைவி சரோஜா தேவி (வயது 53).

    சம்பவத்தன்று இவர் தனது மகன் வெங்கட் பிரவு என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். மோட்டார் சைக்கிள் கோவை- சிறுவாணி மெயின் ரோட்டில் ஆண்டிப்பாயைம் சந்திப்பில் சென்ற போது ரோட்டின் நடுவே இருந்த வேகதடையை வெங்கட் பிரவு கவனிக்காமல் சென்றார். அப்போது 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

    இதில் சரோஜா தேவி தலை மற்றும் உடலில் பலத்த காயம்அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சரோஜா தேவியை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனளிக ்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொள் ளாச்சி ராமு அவென் யூவை சேர்ந்த வர் சதீஷ் (32). சமையல் தொழி லாளி. சம்பவத ்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டு ப்பாட்டை இழந்து கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சதீஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் படுகாயமடைந்த பெண் பலியானார்.
    • திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நல்லாம்பட்டி அருகே என்.பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். அவரது மனைவி அம்மையத்தாள் (வயது 45). இவர் திண்டுக்கல் நாகல்நகரில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு காய்கறி வியாபாரத்தை முடித்துவிட்டு அவரது சகோதரர் வெள்ளைச்சாமி என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் நாகல் நகர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அம்மையத்தாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×