search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
    X

    பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

    • போலீசார் விசாரணை
    • சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தல்

    செங்கம்:

    ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணகி(வயது 48). இவருடைய கணவர் மாரியப்பன் மற்றும் பேரன்

    எழிலிசைமாறன்(2) ஆகியோருடன் செங்கம் அருகே உள்ள மாதிமங்கலம் பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது செங்கம் நகர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கண்ணகி கீழே விழுந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த அரசு பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கண்ணகி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்து செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கண்ணகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திடவும், இனிவரும் காலங்களில் இது போன்று விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூகஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×