செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி 2 பெண்டாட்டிக்காரர் பலி

Published On 2018-09-21 11:45 GMT   |   Update On 2018-09-21 11:45 GMT
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பெண்டாட்டிக்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

முத்தூர்:

வெள்ளகோவில் கே.சி. பழனிச்சாமி நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 55). விசைத்தறி தொழிலாளி. வடிவேலுக்கு குயிலி, சாவித்திரி என்ற 2 மனைவிகள் உள்ளனர். நேற்று காலை வடிவேல் கோவை-திருப்பூர் ரோட்டில் சேனாதிபாளையம் அருகே ஒரு ஓட்டல் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கல்லூரி மாணவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் வடிவேல் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் செல்லும் வழியிலேயே வடிவேல் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News