செய்திகள்

சங்கரன்கோவிலில் பஸ் டிரைவர் மீது தாக்குதல்- 4 பேர் மீது வழக்கு

Published On 2018-09-21 10:42 GMT   |   Update On 2018-09-21 10:42 GMT
சங்கரன்கோவில் அருகே பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளம் கோபாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (31). இவர் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடி வழியாக ராஜபாளையம் செல்லும் தனியார் பஸ்சில் டிரைவாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் சங்கரன்கோவில் பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் போது இருமன்குளத்தை சேர்ந்த மூக்கையா மகன் சந்திரன் என்பவர் முன்வாசல் வழியாக ஏறியுள்ளார்.

அதற்கு டிரைவர் அழகர்சாமி முன்வாசல் வழியாக பெண்கள் ஏறுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பின்வாசல் வழியாக ஏறுங்கள் என சத்தம் போட்டாராம். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வேகேட் அருகில் இறங்கிய சந்திரன் நடந்த சம்பவம் பற்றி ஊரில் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து அதே ஊரை சேர்ந்த சுரேஷ், முத்துராமலிங்கம் உள்ளிட்ட 3 பேர் இருமன்குளம் பஸ்நிறுத்தத்தில் நின்றனர். பஸ் சங்கரன்கோவிலுக்கு திரும்ப வரும் போது அவர்கள் டிரைவர் அழகர்சாமியிடம் இதுபற்றி கேட்டு தகராறு செய்தனர்.

தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து அழகர்சாமியை அவதூறாக பேசி தாக்கியதாக தெரிகிறது. இது பற்றிய புகாரின் பேரில் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News