செய்திகள்
வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த தலைமை ஆசிரியர் மாரடைப்பால் மரணம்
சென்னையில் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வந்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
சென்னை:
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர் கீ.த.பச்சையப்பன்(வயது 85). இவர், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு சிவில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக இன்று வந்தார்.
மாடியில் உள்ள கோர்ட்டுக்கு செல்ல நடைபடியில் நடந்து சென்றார். அவருடன் அவரது மகனும் உடன் சென்றார். அப்போது திடீரென பச்சையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அங்கேயே அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில், அவரது மகன் தூக்கிச் சென்றார். #tamilnews
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர் கீ.த.பச்சையப்பன்(வயது 85). இவர், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு சிவில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக இன்று வந்தார்.
மாடியில் உள்ள கோர்ட்டுக்கு செல்ல நடைபடியில் நடந்து சென்றார். அவருடன் அவரது மகனும் உடன் சென்றார். அப்போது திடீரென பச்சையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அங்கேயே அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில், அவரது மகன் தூக்கிச் சென்றார். #tamilnews