செய்திகள்

கருமத்தம்பட்டி அருகே இன்று காலை நடந்த விபத்தில் டெய்லர் பலி

Published On 2018-09-19 11:33 GMT   |   Update On 2018-09-19 11:33 GMT
கருமத்தம்பட்டி அருகே இன்று காலை நடந்த விபத்தில் டெய்லர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர்:

கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 46). டெய்லர்.

இவர் இன்று காலை தனது மொபட்டில் செல்லம்பாளையம் நோக்கி சென்றார். மொபட் கனியூர் டோல்கேட் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அர்ஜூன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் அந்த கார் அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளில் மீது மோதி நின்றது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற அய்யப்பன் (47) என்பவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

Tags:    

Similar News