செய்திகள்
சேத்துப்பட்டு அருகே அம்மன் கோவில் உண்டியல் பணம் திருட்டு
சேத்துப்பட்டு அருகே அம்மன் கோவில் உண்டியல் பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அருகே உள்ள கரிப்பூர் கிராமம் எல்லையில் அமைந்துள்ளது கருமாரியம்மன் கோவில். இந்த கோவில் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு கோவிலில் வைக்கட்டிருந்த உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல் கோவிலின் உண்டிலை உடைத்து அதில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு உண்டியலை கோவில் அருகே வீசி சென்றுவிட்டனர்.
இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள் கோவில் உண்டியல் உடைக்கபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையர்கள் குறித்து விசாரணைநடத்தி வருகின்றனர்.