செய்திகள்

மதுரையில் 2 குழந்தைகளின் தாய் உள்பட 2 பேர் மாயம்

Published On 2018-09-14 09:15 GMT   |   Update On 2018-09-14 09:15 GMT
மதுரையில் 2 குழந்தைகளின் தாய் உள்பட 2 பேர் மாயமானார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை நாராயணபுரம் பேங்க் காலனி கவிமணி 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவரது மனைவி திவ்யா (வயது 33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

விஜய்ஆனந்த் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற திவ்யா பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலன் இல்லை.

மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகள் கற்பகவள்ளி. மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கோரிப்பாளையம் பள்ளிவாசலில் சிகிச்சை பெற்று வந்தார்.

சம்பவத்தன்று கற்பக வள்ளி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலன் இல்லை.

இந்த 2 சம்பவங்கள் குறித்து தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News