செய்திகள்
போலீஸ்காரர் மீது சரமாரி தாக்குதல்- 2 பேர் கைது
மதுரை பாண்டிகோவில் அருகில் வாகனங்களை வேறு பகுதிக்கு சென்று நிறுத்துமாறு கூறியுள்ள போலீஸ்காரரை தாக்கியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை:
மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர் கதிர்வேல். இவர் நேற்று காலை 11 மணிக்கு பாண்டிகோவில் அருகே உள்ள திருமண மண்டபம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
வாகனங்களை சிலர் விதிமுறைகளை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்தனர். உடனே கதிர்வேல் வாகனங்களை வேறு பகுதிக்கு சென்று நிறுத்துமாறு கூறியுள்ளார்.
அப்போது அண்ணாநகர், பாத்திமாநகரைச் சேர்ந்த செந்தில்குமார் (28), கொன்னவாயன் சாலையைச் சேர்ந்த அருண்பாண்டி (26) ஆகியோர் போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் 2 பேரும் தன்னை தாக்கியதாக போலீஸ்காரர் கதிர்வேல், அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செந்தில்குமார், அருண்பாண்டியை கைது செய்தனர். #tamilnews
மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர் கதிர்வேல். இவர் நேற்று காலை 11 மணிக்கு பாண்டிகோவில் அருகே உள்ள திருமண மண்டபம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
வாகனங்களை சிலர் விதிமுறைகளை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்தனர். உடனே கதிர்வேல் வாகனங்களை வேறு பகுதிக்கு சென்று நிறுத்துமாறு கூறியுள்ளார்.
அப்போது அண்ணாநகர், பாத்திமாநகரைச் சேர்ந்த செந்தில்குமார் (28), கொன்னவாயன் சாலையைச் சேர்ந்த அருண்பாண்டி (26) ஆகியோர் போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் 2 பேரும் தன்னை தாக்கியதாக போலீஸ்காரர் கதிர்வேல், அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செந்தில்குமார், அருண்பாண்டியை கைது செய்தனர். #tamilnews