செய்திகள்

உடுமலை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி - தொழிலாளிக்கு வலைவீச்சு

Published On 2018-09-10 09:25 GMT   |   Update On 2018-09-10 09:25 GMT
உடுமலை அருகே வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிப்புள்ள பெண்ணை கற்பழிக்க முயன்ற தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
உடுமலை:

உடுமலை அடுத்துள்ள உடுக்கம் பாளையத்தில் 30 வயது பெண் ஒருவர் திருமணம் ஆகாமல் தனது பெற்றோர் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

சம்பவத்தன்று அப்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (38) அப்பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண்ணின் தந்தை தளி போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து அப்பெண்ணை உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற முருகன் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க உடுமலை டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யாசாமி, சக்திவேல், போலீஸ்காரர்கள் அனுமந்தன், கருப்புசாமி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தலைமறைவான முருகனை தேடி வருகிறார்கள்.

இது குறித்து அப்பெண்ணின் தந்தை கூறியதாவது-

எனது மகள் 11-ம் வகுப்பில் தோல்வி அடைந்துவிட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார். சம்பவத்தன்று எனது மனைவி வேலைக்கு சென்றுவிட்டார்.

நான் பக்கத்து தெருவில் உள்ள நண்பரை பார்க்க சென்றுவிட்டேன். எனது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முருகன் எனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அங்கு வந்தேன். அதிர்ச்சி அடைந்த நான் முருகனை பிடிக்க முயன்றேன். ஆனால் அவர் என்னை அடித்து உதைத்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News