செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.#SivakasiFireworks #FireworksExplosion
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் செயல்படும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. சக்திவாய்ந்த பட்டாசுகள் வெடித்து நாலாபுறமும் சிதறியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. விபத்து ஏற்பட்டதும் தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைக்க போராடினர். தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொன்னுசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விபத்து தொடர்பாக, பட்டாசு ஆலை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #SivakasiFireworks #FireworksExplosion