செய்திகள்

அருப்புக்கோட்டை வழியாக சென்னைக்கு ரெயில்களை இயக்க கோரி உண்ணாவிரதம்

Published On 2018-09-08 10:00 GMT   |   Update On 2018-09-08 10:00 GMT
அருப்புக்கோட்டை வழியாக சென்னைக்கு தினசரி ரெயில் இயக்க கோரி நாளை உண்ணாவிரதம் நடக்க உள்ளதாக ரெயில் பயணிப்போர் நல சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
பாலையம்பட்டி:

அருப்புக்கோட்டை வழியாக சென்னைக்கு தினசரி ரெயில் இயக்க கோரி வருகிற 9-ந் தேதி புதிய பஸ் நிலையம் முன்பாக ரெயில் பயணிப்போர் சங்கம் மற்றும் தேவாங்கர் வர்த்தக சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.

வியாழன், ஞாயிறு 2 நாட்கள் மட்டும் இயக்கப்படும் சிலம்பு ரெயிலை தினசரி இயக்க வேண்டும். தாம்பரத்தில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டைக்கு தினசரி ரெயிலாக அறிவிக்கப்பட்ட அந்தியோதயா பகல் நேர ரெயில் வண்டியை விரைவில் இயக்க வேண்டும்.

கொல்லத்திலிருந்து ராமேசுவரம் வழியாக அருப்புக்கோட்டை, புதிய ரெயில் இயக்க வேண்டும். மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு காரியாபட்டி அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய வழித்தடம் சர்வே முடிந்த நிலையில் நில ஆர்ஜிதம் செய்து பணிகளை விரைவாக முடித்து இந்த வழித்தடத்திலும் ரெயில்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டி ரெயில்வே துறை அமைச்சர், தமிழக முதல்வர், கலெக்டர்களை கேட்டுக் கொள்ளும் வகையில் அருப்புக்கோட்டையில் உண்ணாவிரதம் நடக்க உள்ளதாக ரெயில் பயணிப்போர் நல சங்க தலைவர் மனோகரன் கூறினார்.#tamilnews
Tags:    

Similar News