search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் இயக்கம்"

    • மதுரையில் இருந்து சக்தி பீடங்கள்-ஜோதிர்லிங்கம் கோவில்களுக்கு சுற்றுலா ெரயில்கள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இயக்கப்படுகிறது.
    • இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

    மதுரை

    ஆன்மீக திருத்தலங்க ளுக்கு அனைவரும் செல்லும் வகையில் சுற்றுலா ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சக்தி பீட சுற்றுலா ெரயில் மதுரையில் 2இருந்து இயக்கப்பட உள்ளது. வருகிற பிப்ரவரி 9-ந்தேதி இந்த ரெயில் மதுரையில் இருந்து புறப்படுகிறது.

    12-ந்தேதி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி அலோபி தேவி தரிசனம், கங்கையில் புனித நீராடி விசாலாட்சி அம்மன் தரிசனம், கயா வில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்து மங்கள பவுரி தேவி தரிசனம், காமாக்யா தேவி தரிசனம், கொல்கத்தா காளி தரிசனம், காளிகாட், போளூர் மடம், தஷிணேஸ்வரர் தரிசனம்.

    ஒடிசா கொனார்க் சூரிய கோவில், பூரி ஜெகநாதர் மற்றும் பிமலா தேவி தரிசனம் முடித்து சுற்றுலா ரெயில் 21-ந்தேதி மதுரை வந்து சேருகிறது.

    நபர் ஒருவருக்கு கட்டணம் ரூ.21 ஆயிரத்து 500 ஆகும். இந்த சுற்றுலா ெரயிலுக்கான பயண சீட்டு முன்பதிவு www.ularail.com என்ற இணையதளத்திலும் அல்லது 73058 58585 என்ற அலைபேசி எண் மூலமும் செய்து கொள்ளலாம்.

    இதேபோல் மாசி மகத்தை முன்னிட்டு ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ெரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்து மார்ச் 3-ந்தேதி புறப்படும் சுற்றுலா ரெயில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக 5-ந்தேதி உஜ்ஜைனி சென்று மகா காளேஸ்வரர் வழிபாடு. பின்பு 6-ந்தேதி நர்மதை நதியில் நீராடி ஓம்காரேஸ்வரர் தரிசனம், 7-ந்தேதி சோம்நாத் சோமநாத சுவாமி தரிசனம், 9-ந்தேதி நாசிக் திரையம்கேஸ்வரர் வழிபாடு, 10-ந்தேதி பீம் சங்கர் பீம்சங்கர சுவாமி தரிசனம், 11-ந் தேதி அவுரங்காபாத் குருஸ் ணேஸ்வரர் தரிசனம், 12-ந்தேதி அவுங்நாக்நாத் அவுங்நாகநாதர் தரிசனம், 13-ந்தேதி பார்லி வைத்தியநாதர் தரிசனம், 14-ந்தேதி ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி தரிசனம் செய்து விட்டு சுற்றுலா ெரயில் 15-ந்தேதி மதுரை வந்து சேருகிறது.ெரயில் கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் பஸ் கட்டணம் உள்பட நபர் ஒருவருக்கு ரூ.23 ஆயிரத்து 400 கட்டணம் ஆகும்.

    இந்த கட்டணத்துடன் குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டியில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு கூடுதலாக கட்டணம் ரூ,7 ஆயிரத்து 100 செலுத்த வேண்டும்.

    இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • சேலம் ெரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • போத்தனூா், இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும்.

    கோவை,

    கோவை- போத்தனூா் இடையே நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக மதுரை-ஷொரனூா் ெரயில்கள் நாளை (31-ந் தேதி) முதல் நவம்பா் 15-ந் தேதி வரை போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும் என ெரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை- போத்தனூா் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக தினமும் மதியம் 12.45 மணிக்கு கோவை ரெயில் நிலையம் வந்தடையும் மதுரை - கோவை தினசரி ெரயில் (எண்: 16722)நாளை (31-ந் தேதி) முதல் நவம்பா் 15-ந் தேதி வரை மதுரை - போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும். போத்தனூா் - கோவை இடையே இயக்கப்படாது.

    தினமும் காலை 11.10 மணிக்கு கோவை ெரயில் நிலையத்தை வந்தடையும் ஷொரனூா் - கோவை ெரயில் (எண்: 06458) நாளை (31-ந் தேதி) முதல் நவம்பா் 15-ந் தேதி வரை ஷொரனூா்- போத்தனூா் இடையே மட்டுமே இயக்கப்படும். போத்தனூா்- கோவை இடையே இயக்கப்படாது.

    இதேபோன்று, கோவை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ஆலப்புழா-தன்பாத் விரைவு ெரயில் (எண்: 13352) நாளை (31-ந் தேதி) முதல் நவம்பா் 15-ந் தேதி வரை கோவை ெரயில் நிலையம் வழியாக இயக்கப்படாமல் போத்தனூா், இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும்.

    ஈரோட்டில் ெரயில் பாதையில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - சேலம் ெரயில் நாளை (31-ந் தேதி) முதல் நவம்பா் 29-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    கோவையில் இருந்து காலை 9.05 மணிக்குப் புறப்படும் கோவை - சேலம் ெரயில் (எண்: 06802) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்குப் புறப்படும் சேலம் - கோவை ெரயில் (எண்: 06803) அக்டோபா் 31-ந் தேதி முதல் நவம்பா் 29-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • தென்மாவட்டங்களில் சுற்றுலாதலங்களுக்கு வருவோர் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.

    கோவை:

    மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி (எண் 06029), திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரெயில் (எண் 06030) கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவையில் இருந்து மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்வோர், தென்மாவட்டங்களில் இருந்து கோவை, ஊட்டி சுற்றுலாதலங்களுக்கு வருவோர் என ஏராளமானோர் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த ரெயிலானது கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

    இந்தநிலையில் இன்று முதல் கோவை மாவட்டம் போத்தனூர் ரெயில் நிலையத்திலும் ரெயில் நின்று செலலும் என சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    • மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு 29-ந் தேதி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

     மதுரை

    ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    ரெயில் இயக்கம், தகவல், Train operation, information,

    மதுரையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும் ரெயில், காலை 9.15 மணிக்கு ராமேசுவரம் செல்லும். மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 5.15 மணிக்கு மதுரை வந்து சேரும். கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நிற்கும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    ×