மேட்டுப்பாளையம்-நெல்லை ரெயில் போத்தனூரில் இன்று முதல் நின்று செல்லும்

கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் சுற்றுலாதலங்களுக்கு வருவோர் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்-நெல்லை ரெயில் போத்தனூரில் இன்று முதல் நின்று செல்லும்
Published on

கோவை:

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி (எண் 06029), திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரெயில் (எண் 06030) கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது.

கோவையில் இருந்து மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்வோர், தென்மாவட்டங்களில் இருந்து கோவை, ஊட்டி சுற்றுலாதலங்களுக்கு வருவோர் என ஏராளமானோர் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரெயிலானது கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இந்தநிலையில் இன்று முதல் கோவை மாவட்டம் போத்தனூர் ரெயில் நிலையத்திலும் ரெயில் நின்று செலலும் என சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com