செய்திகள்
திருமங்கலத்தில் வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு
திருமங்கலத்தில் வீட்டில் இருந்த 5 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பேரையூர்:
திருமங்கலத்தில் உள்ள சோழவந்தான் சாலை, பனைமர பஸ் நிறுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி ஜெயபிரபா (வயது 35). இவரது சகோதரியிடம் இருந்த 5 பவுன் நகையை வாங்கி வைத்திருந்தார்.
சம்பவத்தன்று அந்த நகையை வீட்டின் சிலாப்பில் வைத்திருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த 5 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினார்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஜெயபிரபா நகை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். #tamilnews
திருமங்கலத்தில் உள்ள சோழவந்தான் சாலை, பனைமர பஸ் நிறுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி ஜெயபிரபா (வயது 35). இவரது சகோதரியிடம் இருந்த 5 பவுன் நகையை வாங்கி வைத்திருந்தார்.
சம்பவத்தன்று அந்த நகையை வீட்டின் சிலாப்பில் வைத்திருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த 5 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினார்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஜெயபிரபா நகை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். #tamilnews