செய்திகள்

திருப்பூரில் பஸ்- லாரி இடையே சிக்கி தொழிலாளி பலி

Published On 2018-09-07 10:54 GMT   |   Update On 2018-09-07 10:54 GMT
திருப்பூரில் மோட்டார்சைக்கிளில் சென்ற தொழிலாளி முன்னால் சென்ற பஸ் மற்றும் பின்னால் வந்த லாரி இடையே சிக்கி பரிதாபமாக பலியானார்.
திருப்பூர்:

திருப்பூர் ஆண்டிபாளையம் முல்லைநகரை சேர்ந்தவர் சசிகுமார்(46). இவர் மங்கலம் சாலையில் சலுன்கடை நடத்தி வந்தார். இரவு கடையை பூட்டிவீட்டு திருப்பூர் பழையபஸ் நிலையம் நோக்கி மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.

பழகுடோன் பகுதியில் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த பஸ் திடீர் என பிரேக் போட்டதால் சசிகுமார் பஸ் மீது மோதினார்.

அதேநேரத்தில் பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ்-லாரிக்கு இடையே சிக்கி சசிகுமார் நசுங்கினார். இதில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மத்திய பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News