செய்திகள்

போத்தனூரில் மொபட் மோதி மூதாட்டி பலி

Published On 2018-09-06 12:21 GMT   |   Update On 2018-09-06 12:21 GMT
போத்தனூரில் மொபட் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

போத்தனூர் சித்தண்ணபுரத்தை சேர்ந்தவர் நெல்சன் பென்னி. இவரது மனைவி ரீடா(வயது 63).சம்பவத்தன்று இரவு ரீடா தனது மகன் சார்லஸ் ஆண்டனியுடன் அப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது மொபட்டில் வந்த வாலிபர் ரீடா மீது வேகமாக மோதினார்.இதில் ரீடா தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். 

தாய் விபத்தில் சிக்கியதை பார்த்த சார்லஸ் ஆண்டனி அதிர்ச்சியடைந்தார். அவர் தாயை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ரீடா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரீடா பரிதாபமாக இறந்தார்.

விபத்தை ஏற்படுத்திய மொபட்டை வெள்ளலூர் ரோடு, கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சங்கர் (23) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவர் மீது போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News