செய்திகள்

ஜெ. மரண விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை - அப்போலோ மருத்துவமனைக்கு எச்சரிக்கை

Published On 2018-09-06 12:13 GMT   |   Update On 2018-09-06 12:13 GMT
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு முறைப்படி ஒத்துழைப்பு வழங்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #JayalalithaaDeathProbe #ApolloHospital
சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை நிவர்த்தி செய்ய தமிழக அரசால் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அதேபோல், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த முறை நடைபெற்ற விசாரணையில், சில மருத்துவர்கள் கலந்துகொள்ளவில்லை எனவும், ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக கோடிக்கணக்கில் கட்டணம் பெற்றுக்கொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், இன்னும் 6 பேர் ஆஜராக வேண்டும் எனவும், அவர்கள் ஆஜராகவில்லை என்றால், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் எச்சரித்துள்ளது. #JayalalithaaDeathProbe #ApolloHospital
Tags:    

Similar News