செய்திகள்

சேலத்தில் காதல் திருமணம் செய்த பெண் மாயம்

Published On 2018-09-06 12:07 GMT   |   Update On 2018-09-06 12:07 GMT
சேலத்தில் காதல் திருமணம் செய்த பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

கொண்டலாம்பட்டி:

சேலம் கந்தம்பட்டி, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அருண் (வயது 28). விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமலா(23). இவர் சென்னை, கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் ஆவார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு கந்தம்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் அருண் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் மனைவி இல்லை. அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. 

இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் அமலாவை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News