செய்திகள்

சேலம் அருகே தனியார் பள்ளி வேன் மோதி தொழிலாளி பலி

Published On 2018-09-04 11:07 GMT   |   Update On 2018-09-04 11:07 GMT
சேலம் அருகே தனியார் பள்ளி வேன் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தாராபுரத்தில் பவர் பிளாக்கல் ஓட்டும் தொழில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் கன்னங்குறிச்சி மன்னார் பாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் அங்கிருந்து தங்கவேல் உட்பட 4 பேர் தீவட்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு பவர் பிளாக் செங்கலை கொண்டு வந்தனர். அப்போது அவர் எதிரே உள்ள கடையில் டீ குடிப்பதற்காக சேலம்-தர்மபுரி நெடுஞ்சாலையில் ரோட்டை கடக்க முயனறார். அப்போது அந்த தனியார் பள்ளி வேன் தங்கவேல் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தீவெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News