செய்திகள்

ராஜபாளையம் அருகே ராணுவ வீரர் விபத்தில் பலி

Published On 2018-09-03 10:22 GMT   |   Update On 2018-09-03 10:22 GMT
ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பலியானார். பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லம் கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் தங்கம் (வயது 36) ராணுவ வீரர். இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களது மகன் அஜய்தர்சன் (வயது 2½). கடந்த 5 நாட்களுக்கு முன்பு தங்கத்திற்கு 2-வது ஆண் குழந்தை பிறந்தது. மகனை பார்ப்பதற்காக தங்கம் சொந்திராபாத்தில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தார்.

சேத்தூரில் உள்ள மாமியார் வீட்டில் இருந்து மனைவி மற்றும் மகன்களை பார்பதற்காக தங்கம் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு மகனை பார்த்து விட்டு இரவில் ஜமீன் கொல்லம் கொண்டானுக்கு புறப்பட்டார்.

அம்மையப்பபுரம்- இளந்திரை கொண்டான் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.

இதில் கீழே விழுந்த தங்கம் பலத்த காயம் அடைந்து மயங்கினார்.

அதேபகுதியை சேர்ந்த இளையராஜா அந்த வழியே வந்தபோது காயங்களுடன் தங்கம் கிடப்பதை கண்டார். இதுபற்றி ஈஸ்வரியின் சகோதரர் முருகனுக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து தங்கத்தை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விபத்து குறித்து தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News