செய்திகள்

சிவகிரி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

Published On 2018-09-03 10:03 GMT   |   Update On 2018-09-03 17:26 GMT
சிவகிரி அருகே நண்பர்களுடன் குளித்தபோது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகிரி:

சிவகிரியை சேர்ந்தவர் அர்ச்சுனன். டெய்லர். இவரது மகன் வினோத்(வயது16). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை நாள் என்றதால் வினோத் தனது நண்பர்களுடன் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் வழி வழி கண்மாய் என்ற இடம் அருகே கிணற்றில் குளிக்க சென்றார்.

கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது வினோத் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். உடனே அவரை சக நண்பர்கள் மீட்க முயன்றனர். முடியாததால் இதுபற்றி வினோத்தின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதுபற்றி அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் மூழ்கிய வினோத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

வாசுதேவநல்லூர் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் கிணற்று நீரை வற்ற வைத்து வினோத்தை தேடினர். நள்ளிரவு வெகு நேரத்துக்கு பின்னர் கிணற்றில் மூழ்கிய வினோத் பிணமாக மீட்கப்பட்டார். இதுபற்றி சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாசுதேவநல்லூர் தீயணைப்பு படையினரிடம் நவீன உபகரணங்கள் இல்லாததால் வினோத் உடலை மீட்பதில் முதலில் சிக்கல் ஏற்பட்டது. பின்பு கிணற்று நீரை முழுமையாக மோட்டார் மூலம் வற்ற வைத்த பின்பே உடலை மீட்க முடிந்தது. இதுபோன்ற சூழல்களில் பயன்படுத்த தீயணைப்பு படையினருக்கு நவீன உபகரணங்கள் வழங்கவேண்டும் என்று அப்பகுதியினர் கூறினார்கள். #tamilnews
Tags:    

Similar News