செய்திகள்
பரமத்தி வேலூரில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்தி வேலூரில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
பரமத்திவேலூர் மேலத்தெருவை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மனைவி பார்வதி. இவர்களது மகன் சக்திவேல் (வயது 24), எம்.எஸ்சி. பட்டதாரி. தற்போது வேலையில்லாமல் கூலிவேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சக்திவேல் பூஜை அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு வந்த பெற்றோர்கள் பூஜை அறையில் சக்திவேல் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சக்திவேலின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சக்திவேல் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர் மேலத்தெருவை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மனைவி பார்வதி. இவர்களது மகன் சக்திவேல் (வயது 24), எம்.எஸ்சி. பட்டதாரி. தற்போது வேலையில்லாமல் கூலிவேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சக்திவேல் பூஜை அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு வந்த பெற்றோர்கள் பூஜை அறையில் சக்திவேல் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சக்திவேலின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சக்திவேல் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.