செய்திகள்
புழல் ஜெயிலில் கைதிக்கு கஞ்சா கடத்திய சிறைக்காவலர் சஸ்பெண்டு
புழல் ஜெயிலில் கைதிக்கு கஞ்சா கொடுக்க உள்ளாடையில் மறைத்து வைத்து கொன்றச் சென்ற சிறைக்காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
செங்குன்றம்:
இதில் பாலாஜி உள்ளாடையில் மறைத்து வைத்து கஞ்சா கடத்தி வந்ததும், அதனை சிறையில் உள்ள கைதிக்கு கொடுக்க இருந்ததும் தெரியவந்தது.
இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். விசாரணையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஏஜெண்டாக செயல்பட்ட அருண் செல்வராஜ் என்பவரிடம் ரூ.2 ஆயிரம் வாங்கிக் கொண்டு காவலர் பாலாஜி கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.
இதற்கிடையே சிறைக் காவலர் பாலாஜியை ‘சஸ்பெண்டு’ செய்து ஜெயில் சூப்பிரண்டு செந்தாமரைக் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். பாலாஜியின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆகும்.