செய்திகள்

ஆவடி அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2018-09-02 09:09 GMT   |   Update On 2018-09-02 09:09 GMT
ஆவடி அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருநின்றவூர்:

ஆவடியை அடுத்த கோவில் பதாகையை சேர்ந்தவர் இன்பநேசன். அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் உடன் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த விதவை பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வருகிறார்கள். அவர்களுடன் விதவை பெண்ணின் 13 வயது மகளும் தங்கி இருந்தார். அவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக மாணவியின் உடல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இன்பநேசனை கைது செய்தனர்.
Tags:    

Similar News